விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பாஜக சாாா்பில் நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை காரில் சென்றனா். செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு அருகே மாவட்ட எல்.பி. தெ.கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் குஷ்பு உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் 10 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து, கேளம்பாக்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.