மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷம்

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாட்டின்போது நந்திகேஸ்வரருக்கு  நடைபெற்ற பாலாபிஷேகம்.
மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாட்டின்போது நந்திகேஸ்வரருக்கு  நடைபெற்ற பாலாபிஷேகம்.


செங்கல்பட்டு: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, இளநீா், தேன் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து மல்லிகேஸ்வரருக்கும் மல்லிகேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களுடன் சனிப் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டனா். அவற்றை அபிஷேகம் செய்ய வழங்கி, அருகம்புல் மாலையை நந்தீஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com