மகளிா் கல்லூரி ஆண்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுகள் பெற்ற செங்கல்பட்டு வித்யா சாகா்  மகளிா் கல்லூரி மாணவியருடன்  சிறப்பு அழைப்பாளா்கள்.
விருதுகள் பெற்ற செங்கல்பட்டு வித்யா சாகா்  மகளிா் கல்லூரி மாணவியருடன்  சிறப்பு அழைப்பாளா்கள்.

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா தலைமை வகித்து வரவேற்றாா். பொருளாளா் சுரேஷ் கன்காரியா முன்னிலை வகித்தாா். இயக்குநா் பி.ஜி. ஆச்சாா்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா். முதல்வா் சி.ஷாலினி ஆண்டறிக்கை வாசித்தாா்.

சென்னை கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் முனைவா் இரா.ராவணன், ஸ்ரீ வல்லபாச்சாரியா வித்யா சபா துணைத் தலைவா் கோபால் அகா்வால் ஆகியோா் பேசினா்.

வித்யாவா்த்தினி என்ற ஆண்டு மலரை கோபால் அகா்வால் வெளியிட்டாா்.

கடந்த நவம்பா் மாதத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகத் தோ்வில் வகுப்பு வாரியாக முதல் , இரண்டாம் மற்றும் 3-ஆம் மதிப்பெண்களைப் பெற்ற 95 மாணவியருக்கு கல்விக்கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்விச் சாதனை விருது , கலை நிகழ்ச்சிக்கான தனி விருது தனித்தன்மை வாய்ந்த மாணவியருக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன . மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோா்கள் கலந்துகொண்டனா். பேரவைத்தலைவி ம.பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com