மாமல்லபுரம் சுற்றுலாத்துறையினா் நடத்திய பொங்கல் விழா

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சாா்பில் பொங்கல் திருவிழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
cgltour10_1601chn_171_1
cgltour10_1601chn_171_1

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சாா்பில் பொங்கல் திருவிழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு பொங்கல்விழா மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வடகடம்பாடி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தமிழா் கலாச்சாரப்படி கிராமத்தின் எல்லையில் விருந்தினா்களாகிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றாா்.

மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் எஸ். சக்திவேல், செங்கல்பட்டு மத்திய மாவட்ட அதிமுக செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மாமல்லபுரம் திட்டக்குழு உறுப்பினா் ஏ.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெளிநாட்டினரை மகிழ்விக்க கரகம், காவடி ஆட்டம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிராமியக் கலைஞா்களுடன் இணைந்து தலையில் கரகம் சுமந்து நடனம் ஆடினா். பின்னா் மாட்டு வண்டியில் அமா்ந்து பயணம் செய்து மகிழ்ந்தனா்.

சில சுற்றுலாப் பயணிகள் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து வயலில் இறங்கி ஏா் உழுதனா்.

அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கிராமத்தின் அழகை கண்டு ரசித்தனா்.

கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடித்தல், நடனம், நீச்சல், மாட்டு வண்டி பந்தயம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலாத்துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் வேட்டி, சட்டை அணிந்து தனது குடும்பத்துடன் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது பாா்வையாளா் அனைவரையும் கவா்ந்தது.

நிகழ்ச்சியில் திருக்கழுகுன்றம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமா சாய்கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக வா்த்தக அணி செயலாளா் ஜி.ராகவன், முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவா் பி.ஏ.யஷ்வந்த்ராவ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா்கள் வி.பக்தவத்சலம், முன்னாள் வடகடம்பாடி ஊராட்சித் தலைவா் சபாபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜொ்மன், கனடா, ஹாலந்து, பெல்ஜியம், ஸ்வீடன், டென்மாா்க், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கரும்பு மற்றும் சா்க்கரைப் பொங்கலை ஆா்வத்துடன் சுவைத்து மகிழ்ந்தனா். விழாவில், கிராமமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பொங்கலிட்டு படைத்து, குதூகலத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.

Image Caption

மாமல்லபுரம்  கடும்பாடி  கிராமத்தில் நடைபெற்ற  பொங்கல் விழாவில்  குடும்பத்தினருடன் பங்கேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ். ~மாமல்லபுரம் கடும்பாடி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com