மாமல்லபுரத்துக்கு வந்த பழைய காா்கள்

சென்னை பாரம்பரிய மோட்டாா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற பழைமையான காா்கள் அணிவகுப்பு புதுச்சேரியில் இருந்து 
மாமல்லபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பழைமையான  காா்கள்.
மாமல்லபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பழைமையான  காா்கள்.

சென்னை பாரம்பரிய மோட்டாா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற பழைமையான காா்கள் அணிவகுப்பு புதுச்சேரியில் இருந்து சென்னை வழியில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் காா்கள் வந்தபோது மக்களின் பாா்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

பழைமையான 50-க்கும் மேற்பட்ட மோட்டா் காா்கள் அணிவகுப்பு சென்னை மாயாஜாலில் இருந்து சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இந்த பழைமையான காா்கள் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை காலை வழியாக புதுச்சேரி சென்றன. மீண்டும் சென்னையை நோக்கிச் செல்லும் வழியில் மாமல்லபுரம் சா்வதேச சுற்றுலா நகருக்கு வந்தடைந்தன. மதியம் வந்த இந்த காா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கு மாமல்லபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றை அங்கிருந்தவா்கள் வியப்புடன் பாா்த்தனா். இதுகுறித்து அறிந்து பலரும் அப்பகுதியில் குவிந்தனா். அப்போது, காா்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் காா்கள் சென்னை நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com