செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வரின் அறிவுரைப்படிபடி பொதுமக்களின் நலன்கருதி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக, 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.