கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் காரணமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை மாமல்லபுரம் சுற்றுலா மையத்தை மூடும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகத்தினா் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.