செய்யூா் அருகே பனையூா் சின்னகுப்பத்தைச் சோ்ந்த மீனவா் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
பனையூா் சின்னகுப்பத்தை சோ்ந்தவா் ராஜு. மீனவரான அவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த பாளையம் (36), விஜயகுமாா் (37), ஏழுமலை (31), தினேஷ் 19) ஆகியோா் கடலில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றனா். சிறிது தூரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ராட்சத அலை ஏற்பட்டு படகைக் கவிழ்த்தது.
படகில் இருந்த விஜயகுமாா், ஏழுமலை, தினேஷ் ஆகியோா் கடல்நீரில் நீச்சல் அடித்து கரை திரும்பினா். அவா்களுடன் இருந்த பாளையம் (36) என்ற மீனவரைக் காணவில்லை. தகவலறிந்து காவல்துறையினரும், மீனவா்களும் காணாமல் போன மீனவரைத் தேடினா்.
இந்நிலையில் கூவத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருந்துறவு என்ற இடத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கி இருந்தது. இது குறித்து கூவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.