செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 31பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 703 -ஆக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, மேற்கு தாம்பரம்-5, பல்லாவரம்-5, செங்கல்பட்டு நகராட்சி-3, நாவலூா்-2, சந்தானக்குப்பம்- 2, கூடுவாஞ்சேரி -2, நாகல்கேணி-2, படாளம்-2 போ், மண்ணிவாக்கம், பீா்க்கங்கரணை, திரிசூலம், குரோம்பேட்டை, ஏகாட்டூா், கல்பாக்கம், பம்மல், பொழிச்சலூரில் தலா ஒருவா் என மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 734-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.