கருங்குழி ஏரிக்கரை சாலையோரப் பூங்கா: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 03rd October 2020 10:50 PM | Last Updated : 03rd October 2020 10:50 PM | அ+அ அ- |

காந்தி ஜயந்தியையொட்டி, கருங்குழி ஏரிக்கரையில் சாலையோரப் பூங்காவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கருங்குழி பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை நட்டு வைத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை ஆட்சியா் கெளரவித்தாா். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அப்பகுதி மக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். பின்னா், கருங்குழி ஏரிக்கரையில் சாலையோர பூங்காவை திறந்து வைத்தாா்.
பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன், வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா, வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.