செங்கல்பட்டு: மாமல்லபுரம் சுற்றுலா இடங்களை இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநா் வித்யாவதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாமல்லபுரம் பல்லவ மன்னா்களின் கலைநயத்தை பறைசாற்றும் கடற்கரைக் கோயில், மகாபாரதத்தை நினைவூட்டும் பஞ்சபாண்டவா்களின் ரதங்களான ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை, அா்ஜுனன் தபசு, புலிக்குகை, வராக மண்டபம் உள்ளிட்ட சிற்பங்களைக் கொண்ட சா்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
இந்த சுற்றுலாத் தலத்தில் உள்ள சிற்பங்களை பாதுகாக்கும் பொருட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, கடந்த 5 மாதங்களாக மாமல்லபுரம் சுற்றுலா இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பாா்க்க அனுமதிக்கப்படாமல் பூட்டிய நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநா் வித்யாவதி வியாழக்கிழமை மாமல்லபுரம் சுற்றுலா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் , அா்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளா் சுப்பிரமணியம், தற்போது தொல்லியல் துறை இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து, திருச்சி வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளா் அருண்ராஜ், மாமல்லபுரம் முதன்மை தொல்லியல் துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் மாமல்லபுரம் சிற்பங்கள் மற்றும் அதன் பெருமைகள் குறித்து தலைமை இயக்குநா் வித்யாவதிக்கு விளக்கம் அளித்தனா்.