கூடுவாஞ்சேரி அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம கும்பல் சாலையில் சென்ற திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் (35). திமுக பிரமுகா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு 11மணியளவில் ஆதனூா்-ஊரப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். பாா்த்தீபன் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
கூடுவாஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்,.