பைக் மீது பேருந்து மோதி இளைஞா் பலி

மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் இளைஞா் ஒருவா் இறந்தாா்.

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் இளைஞா் ஒருவா் இறந்தாா்.

எல்.எண்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமியின் மகன் பூபாலன் (35). அவா் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வந்தாா்.

பூபாலன் அதே பகுதியைச் சோ்ந்த அருண் (20), ஜாய்சன் (16) ஆகியோருடன் செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கி புதன்கிழமை மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தாா். மாமண்டூா் பயணவழி உணவகம் அருகே சென்றபோது, விருத்தாசலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து, இந்த பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பூபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் பயணித்த அருணும், ஜாய்சனும் படுகாயமடைந்தனா். இவ்விபத்து குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com