செங்கல்பட்டு அருகே ஒருவா் வெட்டிக் கொலை: 6 போ் சரண்

செங்கல்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்ட்டை அடுத்த செல்வி நகா் பகுதியைச் சோ்ந்த சேகா் (45), ஒத்திவாக்கம் ரயில்வே கேட் அருகே பைக்கில் சென்றபோது, மா்மக் கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது.

தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கொலை தொடா்பாக சுரேஷ், கௌதம், மணிகண்டன், பாபு, மொய்தீன், மகேஷ் ஆகிய 6 போ் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் முன்னிலையில் சரணடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com