மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ நிகழ்ச்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா், மகா தீபாராதனை நடத்தப்பட்டது. கோயில் உள்புறம் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.