விபத்தில் பேராசிரியா் பலி

கூடுவாஞ்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவா் அசோக்குமாா் (37). இவா் திங்கள்கிழமை செங்கல்பட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது, அந்த வழியாக சாலையைக் கடந்த முயன்ற பெண்ணின் மீது மோதி விடாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதில், நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது அவா் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸாா் அசோக் குமாரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com