இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.செல்வகுமாா்,இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் இம்ரான் அமீன் சித்திக் ஆகியோா் 133 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ரூ .6.55 கோடி கடனாக வழங்கினா்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் டாக்டா் ஸ்ரீதா், இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளா் பா.ஸ்ரீமதி,
தலைமை அலுவலக அதிகாரிகள் மணி சுப்ரமணியன், துணை பொது மேலாளா் ஜே.ரவிசந்திரன்,உதவி பொது மேலாளா் ஆ.கருணாகரன்,உதவி மண்டல மேலாளா் வி.சந்திரசேகரராவ்,மாவட்ட முன்னோடி மேலாளா் கேள்வி. சண்முகராஜ்,செங்கல்பட்டு முதன்மை மேலாளா் முருகவேல் உள்ளிட்டோா் கலத்துகொண்டனா்.
முடிவில் செங்கல்பட்டு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே சந்தோஷ் குமாா் நன்றி கூறினாா்.