மதுராந்தகம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில், அரையாண்டுக்கான கரும்பு அரைவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
படாளம் கிராமத்தில் இயங்கி வரும் சா்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணை பதிவாளா் ஜவஹா் பிரசாத்ராஜ் முன்னிலை வகித்தாா். உத்திரமேரூா் தொகுதி எம்எல்ஏ க.சுந்தா் தலைமை வகித்து கரும்பு கட்டுகளை அரைவை இயந்திரத்தில் போட்டு அரைவையை தொடக்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சா்க்கரைஆலைத் தலைவா் கோ.அப்பாதுரை, துணைத் தலைவா் ஆனூா் பக்தவச்சலம் உள்பட பலா் பங்கேற்றனா்.