மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42.5 லட்சம் கடனுதவி

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42.5 லட்சம் கடனுதவி

செங்கல்பட்டு மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.42.5 லட்சம் கடனுதவியை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.42.5 லட்சம் கடனுதவியை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் வழங்கினாா்.

செங்கல்பட்டை அடுத்த மேலேரிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டுறவு சங்கத் தலைவா் சற்குரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் கே.ஆா்.செல்வம், கூட்டுறவு சங்கச் செயலாளா் மேரி செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவரும், அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளருமான திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு 7 மகளிா் சுய உதவி குழுக்களைச் சோ்ந்தவா்களுக்கு தொழில் கடனாக ரூ.42.5 லட்சத்தை ரொக்கமாக வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பி.வி.களத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் அரிகிருஷ்ணன், மேலேரிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் கோவிந்தசாமி, இயக்குநா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com