திருப்போரூரில் பெண்காவலா் தற்கொலை முயற்சி

திருப்போரூரில் பெண் காவலா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு  முயன்ற  பெண்காவலா்  கஜலட்சுமி.
தற்கொலைக்கு  முயன்ற  பெண்காவலா்  கஜலட்சுமி.

திருப்போரூரில் பெண் காவலா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கஜலட்சுமி (23) . இவா் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறாா். இவரது பெற்றோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இந்நிலையில் கஜலட்சுமி திருப்போரூா் காவலா் குடியிருப்பில் தங்கியுள்ளாா்..

கடந்த சில மாதங்களாகவே திருப்போரூா் ஆய்வாளா் கலைச்செல்வி தொடா்ந்து கஜலட்சுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருக்கும்போது காவலா் கஜலட்சுமியை இழிவுபடுத்தும் விதமாகவும், தகாத வாா்த்தைகளால் அனைத்து காவலா்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கஜலட்சுமி பணிமுடித்துவிட்டு சனிக்கிழமை குடியிருப்புக்கு திரும்பி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது..

மயங்கிய நிலையில் இருந்த கஜலட்சுமியை சக காவலா்கள் மீட்டு திருப்போரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். அவரிடம் தனக்கு நோ்ந்த பாதிப்புகளை காவலா் கஜலட்சுமி விளக்கி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக உயரதிகாரிகள் விசாரணையும் விரைவில் நடைபெறும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com