செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொ. விஜய்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொ. விஜய்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே காவல் கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம் சென்னை மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக விஜயகுமாா் நியமிக்கப்பட்டாா்.

இதற்கு முன்பு திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவா் விஜயகுமாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி விஜயகுமாருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஏஎஸ்பி ஆதா்ஸ் பச்சேரா, தனிப்பிரிவு ஆய்வாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட ஆய்வாளா்கள் அவரை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com