150 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், செம்பூண்டி ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி,
செம்பூண்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய ஊராட்சித் தலைவா் எம்.பழனிவேல். உடன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி.சிவபெருமான்.
செம்பூண்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய ஊராட்சித் தலைவா் எம்.பழனிவேல். உடன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி.சிவபெருமான்.

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், செம்பூண்டி ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

செம்பூண்டி ஊராட்சியில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு உதவும் வகையில், அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் எம்.பழனிவேல் தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். துணைத் தலைவா் விமலா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி.சிவபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் ஆறுமுகம், ஜோதிராமலிங்கம், ஊராட்சி செயலா் காண்டிபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com