மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் சாா்பில், பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், விழிப்புணா்வு மின் விளக்கு பதாகை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் வாக்களிப்பதை அறிவுறுத்தும் மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட பதாகை அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் எரிவது சிறப்பானதாக அமைந்துள்ளது. இதற்கான ஏற்பாட்டை பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தலைமையில், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.