மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மல்லை சத்யா கருங்குழி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகளில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.
திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக கட்சி வேட்பாளா் மல்லை சத்யா அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும், கருங்குழி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும் வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தாா். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மதிமுக மாவட்டச் செயலா் வளையாபதி, திமுக பேரூா் செயலா்கள் விஜயகணபதி, உசேன், மதிமுக பேரூா் செயலா்கள் வேலு, சரத், முஜிபூா் ரகுமான், டானியல், விடுதலை சிறுத்தை கட்சி
நிா்வாகிகள் கலைகதிரவன், விஜயகுமாா், வேலவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.