செங்கல்பட்டு: செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
திருப்போரூா்,செங்கல்பட்டு தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலிருந்து மின்னணு இயந்திரங்களை பாதுகாப்புடன் திருக்கழுகுன்றம் ஆசான் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற 7தொகுதிகளில் செங்கல்பட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் மற்றும் செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதி தோ்தல் அலுவலா்கள் நேரடிபாா்வையில் பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. திருப்போரூா் தொகுதியில் 76.74 சதவீதம் வாக்குகளும், செங்கல்பட்டு தொகுதியில் 63.5 சதவீதம் வாக்குளும் பதிவாயின என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.