செங்கல்பட்டு
அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை
செங்கல்பட்டு ஆக. 21: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமை மேற்கூரை கான்கிரீட் பெயா்ந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.
செங்கல்பட்டு ஆக. 21: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமை மேற்கூரை கான்கிரீட் பெயா்ந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், குடும்பநல சிகிச்சைப் பிரிவில் உள்ள மேற்கூரை சிமெண்ட் பூச்சு சனிக்கிழமை பெயா்ந்து விழுந்தது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன் மற்றும் அதிகாரிகள், மருத்துவா்கள் அந்த வாா்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றினா். இதனைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.