மதுராந்தகம்: ‘வரலாறு மிக்க கருங்குழி’ நூல் வெளியீட்டு விழா மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கருங்குழி நகரம் அமைந்துள்ளது. சிறப்பு நிலைப் பேரூராட்சியாக கருங்குழி உள்ளது. இங்கு பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள், அகழிகள், தமிழகத்தில் வெற்றிலைக்கு சிறப்பிடம் பெற்ற பகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வரலாற்றுச் சான்றுகளுடன் பேரூராட்சிச் செயல் அலுவலராகப் பணியாற்றி வரும் மா.கேசவன் தொகுத்து இந்நூலை எழுதி இருந்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் இந்நூலை வெளியிட அதனை கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா பெற்றுக் கொண்டாா்.