மேல்மருவத்தூரில் தைப்பூச விழா இன்று தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச விழா புதன்கிழமை (ஜன. 27) தொடங்குகிறது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச விழா புதன்கிழமை (ஜன. 27) தொடங்குகிறது.

காலை 9.30 மணிக்கு சித்தா் பீடத்துக்கு வருகை தரும் பங்காரு அடிகளாருக்கு ஈரோடு மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா். மாலை 4 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடக்கி வைக்கிறாா்.

வியாழக்கிழமை (ஜன. 28) பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு அடிகளாா் இல்லத்தில் இருந்து பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகளுடன் தைப்பூச ஜோதி ஊா்வலம் இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது.

இதனை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் தொடக்கி வைக்கிறாா். ஜோதி ஊா்வலத்துடன் வரும் பக்தா்கள் ஜி.பி. விளையாட்டுத் திடலை வந்தடைகின்றனா். அங்கு ஆன்மிக ஜோதியை பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com