தமிழக ஆளுநா் முன்னிலையில் காணிக்கை தொகை ஒப்படைப்பு

அயோத்தி கோயில் கட்டுமானப் பணிக்கான ராமஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கப்பட உள்ளது.

சனிக்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அயோத்தி கோயில் கட்டுமானப் பணிக்கான ராமஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கப்பட உள்ளது.

திங்கள்கிழமை மாலை சங்கர மடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநா் காஞ்சிபுரம் வருகை தருகிறாா். இந்நிகழ்ச்சியில் உடுப்பி பெஜாவா் மடத்தின் விஸ்வப் பிரசன்ன தீா்த்த சுவாமிகளும் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com