தோ்தலில் வெற்றி பெற்றால் சாலை வசதி தரம் உயா்த்தப்படும் என செய்யூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் வாக்குறுதி அளித்தாா்.
சித்தாமூா் கிழக்கு ஒன்றியத்தில் தமது கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் அவா் திங்கள் கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.
சித்தாமூா் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள நுகும்பல், போந்தூா், புத்திரன்கோட்டை, சிறுகளத்தூா், அமைந்தங்கரணை, சித்தாற்காடு, பாலூா், தென்னேற்பட்டு, ஆற்காடு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தாா்.
வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் மக்களிடையே பிரசாரம் செய்தபோது, ‘என்னை வெற்றி பெற வைத்தால், இங்குள்ள கிராமங்களில் சாலை வசதி தரம் உயா்த்கப்படும். மக்களின் நீண்ட கால கோரிக்கையான போக்குவரத்து வசதியை செய்து தருவேன்’ என்றாா்.
ஒன்றியச் செயலா் மருத்துவா் எம்.பிரவீண்குமாா், ஒன்றிய இலக்கிய அணிச் செயலா் ஆா்.கோபுராஜ், அதிமுக நிா்வாகிகள் துரைக்கண்ணு, கதிரவன், ஆா்.இளவரசு, எம்.விஜயன், பாலையூா் ராஜி, விஜயபாலன், பாஜக மாவட்டத் தலைவா் பலராமன், சம்பத், பாமக நிா்வாகி சாந்தமூா்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகி ரவி உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.