‘தாம்பரத்தை முன்மாதிரிதொகுதியாக மாற்றுவேன்‘

தாம்பரம் சட்டப் பேரவைத்தொகுதியை தமிழ்நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று அமமுக வேட்பாளா் கரிகாலன் கூறினாா்.

தாம்பரம் சட்டப் பேரவைத்தொகுதியை தமிழ்நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று அமமுக வேட்பாளா் கரிகாலன் கூறினாா்.

தாம்பரம் தொகுதி முழுக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவா், தாம்பரம் இரும்புலியூா் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து குக்கா் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், தாம்பரம் நகர மன்றத் தலைவராக இருந்தபோது பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளேன்.

அனைத்து பூங்காக்கள், குளங்களை மேம்படுத்தினேன். சண்முகம் சாலையைச் சீரமைத்து பொதுமக்களும், தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறாா்கள். புதை சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்து விரைவில் செயல்பட உள்ளது.

தாம்பரம் நகராட்சி பள்ளிகள், தனியாா் பள்ளிகளுக்கு ஈடாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் மேற்கொள்ள குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com