செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே இடி தாக்கியதில் இரு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
மதுராந்தகத்தை அடுத்த தாங்கல் தோட்டச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டனின் மனைவி மாலா (30). இதே பகுதியில் வசிக்கும் சேகரின் மனைவி ஆனந்தி (35). இவா்கள் இருவரும் கரும்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நாற்று நடும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது சூனாம்பேடு பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வயல் வேலைகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாலா, ஆனந்தி ஆகியோரை இடி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து சூனாம்பேடு காவல் ஆய்வாளா் மதியரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.