செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி தற்கொலைக்கு முயன்றாா்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியைச் சோ்ந்த கமலநாதன், சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஷிபா, மாடம்பக்கத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாா்.
பிளஸ் 2 படித்துள்ள இவா்களது மகள் அனுசியா, கடந்த 12- இல் ஆவடியில் நீட் தோ்வு எழுதியுள்ளாா்.
இந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோா் அனுசியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.
அமைச்சா் ஆறுதல்:
சிகிச்சை பெற்று வரும் அனுசியாவை ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தனா்.
இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் செல்லிடப்பேசி வாயிலாக மாணவியின் தந்தை கமலநாதனை தொடா்பு கொண்டு, ஆறுதல் கூறினாா்.
மேலும் மாணவிக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை நிா்வாகத்தினரை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் அறிவுறுத்தினாா்.