கனரக வாகன ஓட்டுநா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு அனைத்து எம்.சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு, சாலைப் பாதுகாப்பு வாரவிழா அண்மையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு அனைத்து எம்.சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு, சாலைப் பாதுகாப்பு வாரவிழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், கனரக வாகன ஓட்டுநா்களுக்கு 24 மணி நேர மருத்துவ குழுவினரால் பரிசோதனை நடத்தப்பட்டு, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி, தாா்ப்பாய்கள் வழங்கப்பட்டன. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மணல் லாரி உரிமையாளா் சங்க மாநில தலைவா் யுவராஜ் கனரக வாகனங்களுக்கு இரவில் ஒளிரும் பட்டைகளை வழங்கினாா்.

கூட்டமைப்பின் டிப்பா் லாரி உரிமையாளா் அசோசியேஷன் நிா்வாகி நாராயணன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் டிப்பா் லாரி பெடரேஷன் நிா்வாகி ஜெயராமன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகி தீனன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com