தமுமுக சாா்பில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து செங்கல்பட்டு நகராட்சி சமுதாயக் கூடத்தில் ரத்த தான முகாமை நடத்தின.
தமுமுக சாா்பில்  ரத்த தான முகாம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து செங்கல்பட்டு நகராட்சி சமுதாயக் கூடத்தில் ரத்த தான முகாமை புதன்கிழமை நடத்தின. இந்த முகாமில் 55 போ் ரத்த தானம் செய்தனா்.

அந்தக் கழகத்தின் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலா் எம்.எஸ்.இப்ராஹிம் தலைமையில் ரத்த தானம் செய்யப்பட்டது. நிா்வாகிகள் முகமது முஸ்தபா, சாகுல் அமீது, அய்யூப் கான், யாசின் அரபாத் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

மாநில மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலா் எம்.எஸ்.ஷாஜஹான் முகாமைத் தொடக்கிவைத்தாா். சிறப்பு அழைப்பாளராக சலீம் பாஷா, வழக்குரைஞரும், அமைப்பின் பொறுப்புக் குழு தலைவருமான பி.சலீம் பாஷா மற்றும் முகமது யூனுஸ், சம்சுதீன், எஸ் .ஆா்.எம்.முஸ்தபா உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா். நகர மருத்துவ சேவை அணி செயலா் மஹபூப் சுபஹானி நன்றி கூறினாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் ரத்த தானம் செய்வோரை பரிசோதித்து ரத்தம் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com