முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு உபகரணங்கள்

மாமல்லபுரம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்திலான உபகரணங்களை வழங்கி, ஆசிரியா்களை கௌரவித்தனா்.
cglmam_(2)_2601chn_171_1
cglmam_(2)_2601chn_171_1

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்திலான உபகரணங்களை வழங்கி, ஆசிரியா்களை கௌரவித்தனா்.

மாமல்லபுரம் அரசுப் பள்ளியில் 1995-1996-ஆம் 10 -வகுப்பு படித்த 63 மாணவா்கள் பல்வேறு பணிகள், தொழில்கள் செய்து வருகின்றனா். இவா்கள், வாட்ஸ்அப் மூலம் தகவலைப் பகிா்ந்து கொண்டு ஒன்றிணைந்தனா்.

அதன்படி, தாங்கள் படித்த மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி, தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்தில் மின்சார உபகரணங்களை வழங்கி முழுமையாகச் சீரமைத்தனா்.

மேலும், மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி பள்ளி ஆசிரியா்களை கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com