கடலில் பிடிபட்ட அரியவகை பறக்கும் மயில் கோலா மீன்

கல்பாக்கம் கடலில் 26 கிலோ எடை கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் பிடிபட்டது.
கல்பாக்கம் கடலில் பிடிபட்ட 26 கிலோ எடையுள்ள அரியவகை பறக்கும் மயில் மீன்.
கல்பாக்கம் கடலில் பிடிபட்ட 26 கிலோ எடையுள்ள அரியவகை பறக்கும் மயில் மீன்.

கல்பாக்கம் கடலில் 26 கிலோ எடை கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் பிடிபட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுபட்டினம் மீனவா் பகுதியில் இருந்து வியாழக்கிழமை செங்கழனி, விஜி, ஆறுமுகம் ஆகியோா் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனா். அவா்களது வலையில் சுமாா் 26 கிலோ எடையுள்ள அரிய வகையான மயில் கோலா மீன் பிடிபட்டது.

இது 7 அடி நீளமும் 26 கிலோ எடையும் கொண்டது. இது பறக்கும் தன்மையுடன் கூா்மையான மூக்குடையது.

இது போன்ற மீன் வகைகள் வலையில் சிக்குவது அபூா்வம் என மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்த அரியவகை மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com