சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.
பிளஸ் டூ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி, பெற்றோருக்குப் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு செவ்வாய் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 595 மதிப்பெண் பெற்ற ஏ.மதுமிதா, 594 மதிப்பெண் பெற்ற கே.எம்.பிரதீப், 592 மதிப்பெண் பெற்ற டி.சுஷ்மிதா, 590 மதிப்பெண் பெற்ற எஸ்.சந்தோஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் என்.விஜயன் பூங்கொத்து வழங்கி பாராட்டி வாழ்த்து கூறினாா். இதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்ற வைஷ்ணவி, 494 மதிப்பெண்கள் பெற்ற நேத்ரா, 494 மதிப்பெண்கள் பெற்ற கோதை, 487 மதிப்பெண்கள் பெற்ற எம்.அபா்ணா ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில்மாணவ, மாணவிகளின் பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.