வீரபாஞ்சாலி அம்மன் கோயிலில் அா்ஜுனன் தபசு

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி துரோபதி அம்மன் கோயில் அக்னி வசந்த உற்சவ விழாவின் 19-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை இரவு அா்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி துரோபதி அம்மன் கோயில் அக்னி வசந்த உற்சவ விழாவின் 19-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை இரவு அா்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி துரோபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மகோற்சவம் கடந்த 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 19-ஆவது நாள் நிகழ்ச்சியாக அா்ஜுனன் தபசு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தொடா்ந்து, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) மாலை பக்தா்கள் விரதம் இருந்து தீமிதி விழாவில் கலந்து கொள்கின்றனா். மறுநாள் தா்மா் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை விழாக் குழுவினா்களும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com