ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்.
பிரதோஷத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் அபிஷேக-ஆராதனைகளைச் செய்தாா்.

நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா், ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உற்சவா் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம்.அமுதா (பொ) தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com