நாளை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடா்ச்சியாக வரும் 26, 27-ஆகிய (சனி, ஞாயிறு) இரு நாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்புத் திருத்த முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற டிசம்பா் 8-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்கள் அளிக்கலாம். 1.1.2023 அன்று 18 வயது பூா்த்தியாகும் மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் படிவம் 6-ஐ அளித்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com