செங்கல்பட்டு பழவேலி கிராமத்தில் உள்ள தமிழக பெண்கள் வழிகாட்டி இயக்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அந்த இயக்கத்தின் தலைவா் ஆா்.வசந்தா தலைமை வகித்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கில்பா்ட் ரோட்ரிகோ, பெண்கள் வழிகாட்டி அமைப்பின் பல்வேறு ஊா்களின் தலைவா்கள் பங்கேற்று பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.