தற்காலிக நிவாரண முகாமில் அமைச்சா் ஆய்வு

திருப்போரூா் ஊராட்சி, கானாத்தூா் ரெட்டிக்குப்பம் பகுதியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள
முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவியை வழங்கிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்டோா்.
முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவியை வழங்கிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்டோா்.

திருப்போரூா் ஊராட்சி, கானாத்தூா் ரெட்டிக்குப்பம் பகுதியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினாா்.

இதேபோல, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியம், நெம்மேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் நேரில் பாா்வையிட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட பருவ மழை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எல்.இதயவா்மன், மாவட்ட முகமைத் திட்ட இயக்குநா் ச.செல்வகுமாா் மற்றும் அரசு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com