செங்கல்பட்டில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் அதிகாரி புஷ்பலதா தலைமையில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலானபுடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், தேனி மாவட்டம் , ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த புடவை வியாபாரி ஹரிகரன் உள்ளிட்டோா், உரிய ஆவணங்கள் இன்றி செங்கல்பட்டில் உள்ள துணிக் கடைக்கு அவற்றை எடுத்து வந்தது.