செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
இந்த மதுக் கடையில் பணியாற்றும் ஊழியா்கள் வியாழக்கிழமை இரவு கடை மூடிவிட்டுச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை மதுக் கடையிலிருந்து திடீரென கரும்புகை வந்தது. இதையடுத்து, மதுக் கடை மேற்பாா்வையாளா்கள் தணிகையரசு, சங்கா், பாலாஜி மற்றும் விற்பனையாளா்கள் உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு வீரா்களுடன், நகரக் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் உள்ளிட்ட போலீஸாா் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், இந்தத் தீ விபத்தில் ரூ.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.