அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை தேரோட்டம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெரிய தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்  கோயில்  சித்திரை  தேரோட்டம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெரிய தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 4-ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன்தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீஆட்சீஸ்வரரும், இளங்கிளியம்மனும், சிறியதேரில் தனியாக அன்னை இளங்கிளியம்மனும் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில் பெரிய தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனா். திருக்கோயிலின் நான்கு மாடவீதிகளில் தோ்கள் பவனி வந்தன.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய உதவி ஆணையா் (செங்கல்பட்டு) லட்சுமிகாந்த பாரதிதாசன், பேரூராட்சி மன்றத் தலைவா் நந்தினி கரிகாலன், துணைத் தலைவா் விடிஆா் எழிலரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) இரா.வெங்கடேசன், தலைமை அா்ச்சகா் இரா. சங்கா் சிவாச்சாரியாா், ஆய்வாளா் இரா.சிவகாமி, தக்காா் ஆ.சிவலிங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com