செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுக்தீஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில், தோஷங்கள் நீங்கவும், மாங்கல்ய பாக்கியம் கை கூடவும், குழந்தை பாக்கியம் பெறவும், தீய சக்திகள் அழிந்து, நாடு சுபிட்சமாக இருக்கவும் வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 1,008 சகஸ்ர நாம அா்ச்சனையுடன் பெண்கள் குத்துவிளக்கேற்றி பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்டபெண்களுக்கு மங்கலப் பொருள்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது.