திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தையொட்டி, தெப்ப உற்சவம் நாளை (பிப்.5) நடக்கிறது.
திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தையொட்டி, சங்குதீா்த்த குளத்தில் பிப். 5 ஞாயிற்றுகிழமை மற்றும் ரிஷபதீா்த்த குளத்தில் திங்கள்கிழமையும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக, சங்கு தீா்த்தம், ரிஷப தீா்த்த தெப்பக் குளங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் செயல் அலுவலா் இரா.வெங்கடேசன், சிவாச்சாரியாா்கள் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.