உலக ஈரநில நாள் விழிப்புணா்வு

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக ஈரநில நாள் விழிப்புணா்வு நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக ஈரநில நாள் விழிப்புணா்வு நடைபெற்றது.

இதை முன்னிட்டு, ஊராட்சியில் வடக்கு ஒன்றிய திமுக, மாநில சுற்றுச்சூழல் அணி சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முகாமுக்கு வடக்கு ஒன்றியச் செயலா் ஜி.தம்பு தலைமை வகித்தாா்.

வேடந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவா் வேதாசலம் முன்னிலை வகித்தாா். உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

இதில், மாநில திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் சாய் ஜெயகாந்தன் பாரதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வெங்கட்ராமன், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com