தமிழ் வளா்ச்சித் துறை ஆட்சிமொழி கருத்தரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறும்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறும்.

மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் இருந்து அலுவலா் ஒருவா் மற்றும் பணியாளா் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளா் நிலையில் ஒருவா் என இருவா் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சி மொழி பயிலரங்கத்திலும், கருத்தரங்கிலும் மாவட்ட நிலை அலுவலா்கள், கோட்ட அலுவலா்கள், வட்டநிலை அலுவலா்கள் பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சி மொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்ட செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம்,, சுருக்கொப்பமிடவேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்கான ஆட்சி மொழி திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com